திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல்தொழில்நுட்ப அணியின் மாநில அளவிள்ஆலோசனை கூட்டம்
நேற்று மாலை கழக தலைவரும் முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் ( M. K. Stalin ) அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் TRB.ராஜா ( TRB Rajaa ) மற்றும் இணை செயலாளர் DR.மகேந்திரன் ( Dr. R. Mahendran ) , கிழக்கு மண்டல பொறுப்பாளர் கேசவன் ( Kesavan Balasubramaniyan ) அவர்கள் மற்றும் துணை செயலலர்கள்
கடலூர் மேற்கு மாவட்டம் கழக சார்பாக நெய்வேலி தொமுச வளாகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவெ.கணேசன் அவர்கள் தலைமையில் , பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன்,B.Sc,B.E,MLA,. அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , மா.துணை, தொகுதி, சமூகவலைத்தள மற்றும் ஒன்றிய,நகர,பேரூர், பகுதி, வட்ட,ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அளவில் ஆலோசனை கூட்டம் : கழக தலைவர் மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை!
- சிலர் போல போட்டோஷாப் செய்யாமல் இருப்பதால்தான் நடுநிலையாளர்களின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அகில இந்திய ஊடகங்கள் நம்மை பாராட்டி வருகின்றன. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கவேண்டும்
- மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும்.
- சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு!
- போன்ற சிறப்புரை தமிழக முதல்வர் அவர்கள் கழக வேட்பாளர்களுக்கும் கலக்கத்தில் உள்ளவர்களுக்கும் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்